உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மாயம்

Published On 2022-11-09 08:34 GMT   |   Update On 2022-11-09 08:34 GMT
  • காரைக்காலில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மாயமானார்.
  • தாய் செல்வராணியை கிருத்திகா தனது வீட்டுக்கு அழைத்துவந்து கவனித்து வந்தார்.

புதுச்சேரி:

காரைக்கால் அருகே கோட்டுச்சேரி மெயின் சாலையில் வசிப்பவர் நாகராஜ். இவரது மனைவி கிருத்திகா. கிருத்திகாவின் தந்தை விஸ்வநாதன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதிலிருந்து கிருத்திகாவின் தாய் செல்வராணி(வயது72) மனநிலை பாதிக்கப்பட்டு தனக்கு தானே பேசி கொன்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், தாய் செல்வராணியை கிருத்திகா தனது வீட்டுக்கு அழைத்துவந்து கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3ந் தேதி, வீட்டில் அமர்ந்திருந்த செல்வராணி மாயமாகிவிட்டதாக கூற ப்படுகிறது. உறவினர்கள் மற்றும் பல இட்டங்களில் தேடியும், செல்வரானி கிடை க்காததால், கிருத்திகா காரைக்கால் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் , தாயை தேடி கண்டுபிடித்துதருமாறு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராணியை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News