உள்ளூர் செய்திகள்

மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

Published On 2022-07-01 07:59 GMT   |   Update On 2022-07-01 07:59 GMT
  • மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேரூராட்சி மன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர்:

மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயமூர்த்தி தலைமையில் நடைபெற்றது துணைத் தலைவர் சாதிகா, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி பேசுகையில், மழைக்காலங்களில் கரையான் குட்டையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் தூர்வாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது மேலும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி பகுதியில் குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேரூராட்சி மன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News