உள்ளூர் செய்திகள்

சாலையில் தேங்கியுள்ள தண்ணீரை படத்தில் காணலாம்.  

மேலப்பாளையம்- ரெட்டியார்பட்டி சாலையில் குளம்போல் தேங்கிய தண்ணீர்

Published On 2022-07-28 09:34 GMT   |   Update On 2022-07-28 09:34 GMT
  • மழைக்காலங்களில் சாக்கடை நீர் செல்ல வழி இல்லாமல் இச்சாலையை சூழ்ந்து உள்ளது.
  • பள்ளிக்கூடம் முடிந்து திரும்பிய மாணவர்கள் இந்த சாக்கடை நீரிலேயே நடந்து செல்லும் நிலை உள்ளது.

நெல்லை:

மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி சாலை மேலப்பாளையம் நகரத்தில் மிக முக்கிய சாலையாக இருந்து வருகிறது.

செப்பனிடாமல் உள்ளது

இச்சாலையில் நாள்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து சென்று வரும் இச்சாலையை பல ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் உள்ளது.

குறிப்பாக மழைக்காலங்களில் சாக்கடை நீர் செல்ல வழி இல்லாமல் இச்சாலையை சூழ்ந்து உள்ளது. நேற்று நெல்லை மாநகரில் பெய்த அரை மணிநேர மழைக்கு தாக்கு பிடிக்காமல் ரெட்டியார்பட்டி ரோடு கரீம்நகர் மற்றும் தாய்நகர் அருகே சாக்கடை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

பள்ளிக்கூடம் முடிந்து திரும்பிய மாணவர்கள் இந்த சாக்கடை நீரிலேயே நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். மேலப்பாளையம் மண்டலம் சாக்கடை நீர் தேங்குவதை அப்புறப்படுத்தி இச்சாலையை விரைந்து சீர் செய்து புதிதாக வடிகால் ஏற்படுத்தி தார்ச்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags:    

Similar News