உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

Published On 2022-08-24 10:34 GMT   |   Update On 2022-08-24 10:34 GMT
  • வருகையானது 100 சதவீதத்தில் இருந்து 40 குறைந்து வந்தது.
  • பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அரவேணு,

கோத்தகிரி அருகே உள்ள கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆர். பி. எஸ். கே மருத்துவ குழு, யூ.என்.சி.எஸ் சார்பில் பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

இதில் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பள்ளியில் மாணவர்கள் உடல்நிலை சரியில்லை எனும் காரணத்தால் தொடர்ந்து வருகையானது 100 சதவீதத்தில் இருந்து 40 குறைந்து வந்தது. எனவே சுகாதார முறையில் ஏதாவது பிரச்சினைகள் எற்பட்டதா எனவும் கண்காணிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று பல்வேறு பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு சில மாணவர்கள் இதயம், கண், நுரையீரல், மூளை போன்ற உறுப்புக்களில் பாதிப்பு எற்பட்டிருந்த குணப்படுத்த உதவ விருப்பமுள்ள ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பு யு. என். சி .எஸ் அனுகி உதவ கேட்டுகொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News