உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 

சுகாதார துறை சார்பில் ஏற்காட்டில் மருத்துவ முகாம்

Published On 2022-10-29 09:21 GMT   |   Update On 2022-10-29 09:21 GMT
  • காதார துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கு வட்டார சுகாதார அலுவலர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • இதில் உயர் ரத்த அழுத்தம், சக்கரைநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல், சளிக்கு மருந்து வழங்கப்பட்டது.

ஏற்காடு:

ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கு வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முரு கன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் உயர் ரத்த அழுத்தம், சக்கரைநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல், சளிக்கு மருந்து வழங்கப்பட்டது.

பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஊழியர்களை பரிசோதித்த னர். இம்முகாமில் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் செல்வகுமார் ஏற்பாடு களை செய்திருந்தார்.

Tags:    

Similar News