ரெட்டியார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தடையின்றி மின்வினியோகம் கிடைக்க நடவடிக்கை
- நெல்லையை அடுத்துள்ள பாளை ரெட்டியார்பட்டி உப மின் நிலையத்தில் காலாவதியான 11 கிலோவோல்ட் தாமரைச்செல்வி மின் பாதைக்கு உண்டான மின்தடை சாதனம் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு அங்கு புதிய மின்தடை சாதனம் பொருத்தப்பட்டது.
- ரெட்டியார்பட்டி மின் விநியோக பிரிவுக்கு உட்பட்ட தாமரை செல்வி மின் பாதையில் வினியோகம் பெறும் சிவந்திபட்டி, இட்டேரி, ஆலங்குளம், கொங்கந்தான் பாறை, மல்லகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தங்கு தடையின்றி மின் விநியோகம் கிடைக்கும்.
நெல்லை:
நெல்லையை அடுத்துள்ள பாளை ரெட்டியார்பட்டி உப மின் நிலையத்தில் காலாவதியான 11 கிலோவோல்ட் தாமரைச்செல்வி மின் பாதைக்கு உண்டான மின்தடை சாதனம் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு அங்கு புதிய மின்தடை சாதனம் பொருத்தப்பட்டது.
இதனை மின்னளவி சோதனை பிரிவு செயற்பொறி–யாளர் ஷாஜகான் தலைமையில் தாழையூத்து சிறப்பு பராமரிப்பு பிரிவு மற்றும் மின் அளவி சோதனை பிரிவு அதிகாரிகள், பணியாளர்கள் பரி சோதனை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்த சாதனத்தால் ரெட்டியார்பட்டி மின் விநியோக பிரிவுக்கு உட்பட்ட தாமரை செல்வி மின் பாதையில் வினியோகம் பெறும் சிவந்திபட்டி, இட்டேரி, ஆலங்குளம், கொங்கந்தான் பாறை, மல்லகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தங்கு தடையின்றி மின் விநியோகம் கிடைக்கும் என அதிகாரிகள் கூறினர்.
நிகழ்ச்சியில் செயற்பொறி யாளர் முத்துக்குட்டி
(நகர்ப்புறம்) , நெல்லை சந்திப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் தங்க முருகன், ரெட்டியார்பட்டி பிரிவு மற்றும் ரெட்டியார்பட்டி உப மின் நிலைய உதவி மின் பொறியாளர் ( பொறுப்பு ) அபிராமிநாதன், சிறப்பு பராமரிப்பு பிரிவு உதவி மின் பொறியாளர் கருங்காட்டான், மற்றும் மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.