உள்ளூர் செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர் மாயம்; மனைவி போலீசில் புகார்

Published On 2023-09-02 07:44 GMT   |   Update On 2023-09-02 07:44 GMT
  • வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வருவார்.
  • செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வடபுத்தூரை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் செந்தில்குமார் (வயது 43). அதே ஊரில் கேபிள் வேலை செய்து வருகிறார். தினமும் காலையில் கேபிள் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வருவார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை, மாயமாகி விட்டார். அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே சந்தேகமடைந்த அவரது மனைவி ராதிகா செஞ்சி போலீசில் தனது கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News