உள்ளூர் செய்திகள்

மாரியம்மன் கோவில் பூட்டு, சி.சி.டி.வி. காமிரா உடைப்பு

Published On 2023-04-25 13:10 IST   |   Update On 2023-04-25 13:10:00 IST
  • கொசவம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.
  • கோவிலின் பூட்டு மற்றும் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் அருகே கொசவம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வழிபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவிலின் பூட்டு மற்றும் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது. இதனைப் பார்த்த கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் பூட்டு மற்றும் சி.சி.டி.வி காமிராவை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 22), சூர்யா (21), அஜித் (23) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News