உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு:மனைவி திட்டியதால் விபரீதம்

Published On 2023-02-22 08:49 GMT   |   Update On 2023-02-22 08:49 GMT
  • சுந்தரம் (வயது 56) . இவர் கடந்த 7-ந் தேதி அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட மனைவி கோபத்தில் திட்டினார்.
  • இதனால் மன வருத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துமயக்கநிலையில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்

கடலூர்:

சிதம்பரம் அருகே வாசப்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சுந்தரம் (வயது 56) . இவர் கடந்த 7-ந் தேதி அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட மனைவி கோபத்தில் திட்டினார். இதனால் மன வருத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து இவரது மகன் குணசேகரன் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News