உள்ளூர் செய்திகள்

சரக்கு வாகனத்தில் ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது

Published On 2023-08-28 14:51 IST   |   Update On 2023-08-28 14:51:00 IST
  • 50 கிலோ எடை கொண்ட 36 பைகளில் 1.8 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • குறைந்த விலைக்கு வாங்கிய கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தசரதராம செட்டி தெருவை சேர்ந்த அஜீத் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வரு கிறார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமை யிலான போலீசார், கிருஷ்ணகிரி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகில் உள்ள ஒரப்பம் 3 ரோடு பகுதியில் வாகன தணிக்கை மேற் கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் 50 கிலோ எடை கொண்ட 36 பைகளில் 1.8 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பிக்அப் வேனை, அரிசியுடன் பறிமுதல் செய்த போலீசார், அந்த வேனை ஓட்டி வந்த டிரைவரான ராயக் கோட்டை அருகில் உள்ள சிங்காரப்பேட்டை கிரா மத்தை சேர்ந்த மாதேஷ் (36) என்பவரை கைது செய்து விசாரணை மேற் கொண்ட னர்.

பிக்வேன் உரிமை யாளரும், அரிசியின் உரிமை யாளருமான கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் அரிசியை ஒரப்பம், முருக்கம்பள்ளம், எலத்தகிரி பகுதிகளில் வீடு வீடாக சென்று குறைந்த விலைக்கு வாங்கிய கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தசரதராம செட்டி தெருவை சேர்ந்த அஜீத் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வரு கிறார்கள்.

Tags:    

Similar News