உள்ளூர் செய்திகள்

புவனகிரி பகுதியில் வாகனங்களில் பேட்டரி திருடியவர் கைது

Published On 2023-03-30 10:20 IST   |   Update On 2023-04-03 11:53:00 IST
  • புவனகிரி பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி உள்ளிட்ட 407 வாகனத்தில் பேட்டரி திருடியவர் கைது செய்யட்டார்.
  • வாகனத்தில் இருந்து பேட்டரி திருடிய போது ரோந்து போலீசாரிடம் கையும் களவுமாக பிடிப்பட்டார்.

கடலூர்:

புவனகிரி பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி உள்ளிட்ட 407 வாகனத்தில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார். வனகிரி அடுத்த பரங்கிப்பேட்டை வண்ணாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் கலைச்செல்வம் (வயது 46). இவர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து பேட்டரி திருடிய போது ரோந்து போலீசாரிடம் கையும் களவுமாக பிடிப்பட்டார்.

இவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது புவனகிரி பகுதியில் உள்ள இரண்டு வாகனங்களில் பேட்டரி திருடியது தெரிய வந்தது. மேலும், இவர் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 407 வாகனங்களில் இருந்து பேட்டரியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து கலைச்செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News