உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே கன்னிமார் கோவில் மரங்களை வெட்டியவர் கைது

Published On 2023-10-20 07:23 GMT   |   Update On 2023-10-20 07:23 GMT
  • கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டு, மரங்கள் அனைத்தும் வெட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
  • சிலைகளை சேதப்படுத்தி, மரங்களை வெட்டிய மர்மநபரை தேடி வந்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராம எல்லையில் உள்ள பஞ்சமி நிலத்தில் கன்னிமார் கோவில் உள்ளது. கடந்த 14-ந்தேதி ஊனத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட கிராம மக்கள் இக்கோவிலில் கிடா வெட்டி வழிபாடு செய்ய 100-க்கும் மேற்பட்டோர் வந்தனர். கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டு, மரங்கள் அனைத்தும் வெட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது சம்பந்தமாக போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

மேலும், கோவில் சிலையை உடைத்து சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்டோர் கோவிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பாரத் சின்னசேலம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சாமி சிலைகளை சேதப்படுத்தி, மரங்களை வெட்டிய மர்மநபரை தேடி வந்தனர். இ்ந்நிலையில் சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அங்குள்ள மரங்களை வெட்டியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News