உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே கண்காணிப்பு கேமராவை உடைத்தவர் கைது

Published On 2023-06-15 07:24 GMT   |   Update On 2023-06-15 07:24 GMT
  • கேமராவை சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்திச் சென்றனர்.
  • வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ரங்கப்பனூர் பஸ் நிறுத்தத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசார ணையில், ரங்கப்பனூர் வடக்கு தெருவை சேர்ந்த கணபதி (வயது 25) என்பவர் கண்கா ணிப்பு கேமராவை உடைத்து சேதப்ப டுத்தியது தெ ரிய வந்தது. இதனை யடுத்து கணபதியை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News