உள்ளூர் செய்திகள்

பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த ஆசாமி கைது

Published On 2022-12-28 09:45 GMT   |   Update On 2022-12-28 09:45 GMT
  • மாதேவியிடம் தகராறு செய்து அவர் கொண்டு சென்ற நிலக்கடலையை பறித்துள்ளார்.
  • அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிந்து குமாரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி மாதேவி (வயது 35).

இவர் தனது தங்கையின் வீட்டுக்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது ஒரு கூடையில் நிலக்கடலை எடுத்து சென்றுள்ளார்.

வழியில் குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த குமார் (40) என்ற ஆசாமி மாதேவியிடம் தகராறு செய்து அவர் கொண்டு சென்ற நிலக்கடலையை பறித்துள்ளார்.

இதை கண்டித்த மாதேவியை தரக்குறைவாக பேசிய குமார் அவரது ஆடையை கிழித்தும் மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாதேவி கொடுத்த புகாரின்பேரில் அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிந்து குமாரை கைது செய்தனர்.

இதேபோல காவேரிபட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ரோந்து சென்றபோது காவேரிபட்டணம்-கிருஷ்ணகிரி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்ட சாம்சன்பேட்டை பகுதியை சேர்ந்த நரேன் (எ)இளமாறன் (32) என்பவரை கைது செய்தார்.

Tags:    

Similar News