உள்ளூர் செய்திகள்

விவசாயியை தாக்கியவர் கைது

Published On 2023-10-09 14:38 IST   |   Update On 2023-10-09 14:38:00 IST
  • காளியப்பன் வளர்த்து வந்த மாடு, கிருஷ்ணனை முட்டியது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.

சூளகிரி,

சூளகிரி அருகே சென்னப்பள்ளி அருகே உள்ள கொண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 35). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (47). இவர்க ளின் நிலம் அருகருகில் உள்ளது. கடந்த 6-ந் தேதி காளியப்பன் வளர்த்து வந்த மாடு, கிருஷ்ணனை முட்டியது.

இது தொடர்பாக பேசிய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கிருஷ்ணனை காளியப்பன் கை, கல்லால் தாககினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.

Tags:    

Similar News