உள்ளூர் செய்திகள் (District)
வள்ளியூரில் கோவில் தெப்பகுளத்தில் ஆண் பிணம்
- தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
- மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் முருகன் கோவில் தெப்பகுளத்தில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை இன்று காலை அங்கு குளிக்க சென்றவர்கள் பார்த்து வள்ளியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் குளத்தில் மிதந்து கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அதனை போலீசார் கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த வாலிபர் யார்? குளத்தில் குளிக்க வந்த இடத்தில் மூழ்கி பலியானாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.