- இந்திய கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவை வழிபாடு.
- தினந்தோறும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களால் பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றது.
மத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் பூமகள் அம்சமாக துளசி வனத்தில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு வளர்த்த சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் நாச்சியார் அருளியது திருப்பாவை ஆகும்.
வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்திய கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவை வழிபாடு.
அத்தகைய சிறப்பு வழிபாட்டின் தொடக்க நிகழ்வாக மார்கழி மாதம் முதல் நாளைத் தொடர்ந்து ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் பாசுரங்கள் பாடி தமிழ்த்துறை ஆசிரியர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தினந்தோறும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களால் பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றது .பள்ளி தாளாளர் சீனி திருமால் முருகன், பள்ளி முதல்வர் லீனா ஜோசப் ஆகியோர் வழிபாட்டில் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பிரசாதம் அளித்து வாழ்த்தி வருகின்றனர்.