உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

Published On 2023-04-24 13:46 IST   |   Update On 2023-04-24 14:11:00 IST
  • திருமங்கலம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமங்கலம்

திருமங்கலத்தை அடுத்த மேலஉரப்பனூரை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இந்தநிலையில் நேற்று தாய் தமிழ்செல்வியிடம் ேசாடா வாங்கிவரும்படி கூறினார். அவர் கடைக்கு சென்றதும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சிவன் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News