உள்ளூர் செய்திகள்

தேஜஸ் ரெயில் தாம்பரத்தில் நிறுத்தப்படுமா? ெரயில்வே பொது மேலாளர் பதில்

Published On 2022-07-31 09:15 GMT   |   Update On 2022-07-31 09:15 GMT
  • தேஜஸ் ரெயில் தாம்பரத்தில் நிறுத்தப்படுமா? என்பதற்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் பதில் தெரிவித்தார்.
  • தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா பதில் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

மதுரை

மதுரை- சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது திண்டுக்கல், திருச்சி ஆகிய 2 இடங்களில் மட்டும் நின்று செல்கிறது.

இந்த நிலையில் தேஜஸ் ரெயிலை தாம்பரத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்தார். அதற்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா பதில் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் மதுரை- சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் தேஜஸ் ரெயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News