உள்ளூர் செய்திகள்

மதுரை வந்த வடமாநில தம்பதிக்கு வரவேற்பு

Published On 2023-06-22 14:29 IST   |   Update On 2023-06-22 14:29:00 IST
  • மதுரை வந்த வடமாநில தம்பதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் செல்ல உள்ளோம் என்றனர்.

மதுரை

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோகித். இவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இருவரும் உலக அமைதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர்.

மராட்டிய மாநிலத்தில் தொடங்கிய இவர்களது சைக்கிள் பயணம் கர்நாடகா வழியாக தமிழகத்தை வந்தடைந்தது. கோவைக்கு வந்த ரோகித்-அஞ்சலி அங்கிருந்து கன்னியாகுமரிக்கு சென்றனர். பின்னர் தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக மதுரை வந்தடைந்தனர்.

காந்தி மியூசியத்தில் அவர்களுக்கு பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு மற்றும் காந்தி அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் மற்றும் நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்று மாலை அணிவித்தனர். தம்பதிக்கு மகாத்மா காந்தியின் சுய சரிதை புத்தகம் வழங்கி கவுரவித்தனர்.

இது குறித்து ரோகித்-அஞ்சலி தம்பதி கூறுகையில், மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கி னோம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சைக்கிள் ஓட்டியப்படியே செல்ல திட்டமிட்டுள்ளோம். லடாக்கில் எங்கள் பயணத்தை முடிக்க உள்ளோம்.

ராமேசுவரம், தனுஷ்கோடி வரை சென்று விட்டு மீண்டும் மதுரை வந்துள்ளோம். ராஜபா ளையம், தென்காசி வழியாக கேரளா சென்று அங்கிருந்து மீண்டும் தமிழகம் வழியாக தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் செல்ல உள்ளோம் என்றனர்.

Tags:    

Similar News