உள்ளூர் செய்திகள்

தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் வரவேற்பு

Published On 2022-10-31 07:54 GMT   |   Update On 2022-10-31 07:54 GMT
  • தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • 1000-த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தி.மு.க. கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.

அவனியாபுரம்

முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்தார். விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்கள் பி.மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, சோழவந்தான் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் மணிமாறன், இளைஞரணி ராஜா, மாணவரணி மருதுபாண்டி, அதலை செந்தில்குமார், போஸ், முத்தையா, ஈஸ்வரன், சசிகுமார், வேட்டையன், விமல், ரோகினி, பொம்மதேவன் உள்பட 1000-த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தி.மு.க. கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.

தையொட்டி விமான நிலையத்தில் துணை ஆணையாளர் பெருமாள் ராமானுஜம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News