உள்ளூர் செய்திகள்
சலவை கூடத்தை ஆய்வு செய்த வெங்கடேசன் எம்.எல்.ஏ.
- சலவை கூடத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- 15, 16-வது வார்டுகளில் மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்தார்.
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவை தொழிலாளர்களின் சலவை கூடத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ.பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சலவை கூடத்திற்கு உடனடியாக கூடுதல் கட்டிடம் கட்டித்தரப்படும், தண்ணீர் வசதிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதி கூறினார்.
இதைத்தொடர்ந்து 15, 16-வது வார்டுகளில் மக்களிடம் நேரடியாக சென்று எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் ஜெயராமன், நகரச் செயலாளர் வக்கீல் சத்யபிரகாஷ், பேரூர் துணைச்செயலாளர் ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, செல்வராணி, ஜெயராமச்சந்திரன், ஒன்றிய, பேரூர் மற்றும் அனைத்து நிர்வாகிகளும், மகளிரணி அமைப்பாளர்கள் உடனிருந்தனர்.