உள்ளூர் செய்திகள்

லாரிகள் மோதல்; டிரைவர் படுகாயம்

Published On 2022-08-16 07:16 GMT   |   Update On 2022-08-16 07:16 GMT
  • திருமங்கலம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
  • இதனால் சிறிது நேரம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

திருமங்கலம்

கடலூர் மாவட்டத்தி லிருந்து நெல் மூைடகளை ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டம் ஆலங்குளத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று காலை மதுரை மாவட்டம் திருமங்கலம்-விருதுநகர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

ராஜபாளையம் சாலை பிரியும் இடத்திற்கு அருகே உள்ள பாலத்தில் சென்றபோது ஓசூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காய்கறி லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதனை ஓட்டி வந்த டிரைவர் நெல்லையைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 25) என்பவர் படுகா யமடைந்தார்.

உடனே அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கிய அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலை உதவி வாகனத்திற்கு தகவல் அளித்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியில் சிக்கிய வேன் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News