உள்ளூர் செய்திகள்

ஆம்னி பஸ் மோதி வியாபாரி பலி

Published On 2023-05-27 07:40 GMT   |   Update On 2023-05-27 08:35 GMT
  • ஆம்னி பஸ் மோதி வியாபாரி பலியானார்.
  • நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜாங்கம் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள குரண்டிபட்டியை சேர்ந்த வர் ராஜாங்கம் (வயது 65), கோழி வியாபாரம் செய்து வந்த இவர், இன்று அதிகாலை மேலூருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டி ருந்தார். அதே சாலையில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி ஒரு ஆம்னி பஸ் சென்றது.

அந்த பஸ் எதிர்பாராத விதமாக ராஜாங்கத்தின் மொபட் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜாங்கம் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி, தனிபிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அவர்கள் ராஜாங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அவர்கள் விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த டிரைவர் சங்கரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News