உள்ளூர் செய்திகள்

சாம்பியன் பட்டம் வென்ற திருநெல்வேலி அணிக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்ட காட்சி.

மாநில அளவிலான ஆக்கி போட்டியில் திருநெல்வேலி அணி சாம்பியன்

Published On 2023-10-03 07:15 GMT   |   Update On 2023-10-03 07:15 GMT
  • மாநில அளவிலான ஆக்கி போட்டி திருநெல்வேலி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • முடிவில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் தலைவர் பி.ஜி.ராஜா நன்றி கூறினார்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப் பட்டி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் முன்னாள் உடற்கல்வி ஆசி ரியர் எல்.ராஜூ நினைவுக் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கிடையே யான 3-ஆம் ஆண்டு மாநில ஆக்கி போட்டிகள் 3 நாட் கள் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளைச் சேர்ந்த 12 அணிகள் விளை யாடின.

இதன் இறுதிப் போட்டி நேற்று மாலை நடந்தது.இதில் திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு விடுதி அணியும், பாண்டிய ராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் திருநெல் வேலி அணி 2:0 என்ற கோல் கணக்கில் பாண்டிய ராஜபுரம் அணியை வென்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நி லைப்பள்ளி அணியும்,3-வது இடத்தை ராமநாத புரம் மாவட்ட விளை யாட்டு விடுதி அணியும், நான்காவது இடத்தை திரு நகர் இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி அணியும் பெற்றனர்.

இதன் பரிசளிப்பு விழா விற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன் தலைமை தாங்கினார். எவர்கிரேட் ஆக்கி கிளப் செயலாளர் சிதம்பரம், உதவி செயலர்கள் சரவ ணன், ரமேஷ், இணைச்செயலர் வெள்ளைச்சாமி ஆகி யோர்முன்னிலை வகித்த னர்.

வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து முதல் பரிசிற்கான கோப்பையினை யும், தொழிலதிபர் சீனிவா சன் இரண்டாம் பரிசிற்கான கோப்பையினையும், மாநக ராட்சி அதிகாரி பாஸ்கரன் மூன்றாம் பரிசிற்கான கோப்பையையும் வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங் கினர்.

ஆட்டநாயகன் விருதினை மாவட்ட விளையாட்டு அலு வலர் சிவா வழங்கினார். முடிவில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் தலைவர் பி.ஜி.ராஜா நன்றி கூறினார்.

Tags:    

Similar News