உள்ளூர் செய்திகள்

வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2023-06-15 08:49 GMT   |   Update On 2023-06-15 09:52 GMT
  • வேலைக்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானார்.
  • கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை மேலக்கால் டோக் நகரை சேர்ந்தவர் ரங்கதுரை. இவரது மகள் மீனாட்சி(வயது19). இவர் பி.பி.சாவடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு மீனாட்சி வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News