உள்ளூர் செய்திகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர்.

இடிந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர்

Published On 2023-10-28 08:32 GMT   |   Update On 2023-10-28 08:32 GMT
  • இடிந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர்
  • நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

ேசாழவந்தான்

மதுரை மாவட்டம் சோழ வந்தானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் இருந்து பொது மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் இந்த மருத்துவ மனை முன் நுழை வாயில் பகுதியில் உள்ள மரம் வளர்ச்சியடைந்து விரி வடைந்து சுற்றுச்சுவர் மீது சாய்ந்துள்ளது. இதனால் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு அதிகப்படியான பொது மக்கள் மற்றும் நோயாளிகள் தினசரி வந்து செல்வதால் எந்நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ள தாக பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.

மேலும் இந்த சுற்றுச்சவருக்கு அருகிலேயே மருத்துவ மனைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்து வதால் எந்த நேரத்திலும் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மேலும் அவசர சிகிச் சைக்கு வரும் வாகனங்களும் இந்த வழியாக வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கின்றனர். ஆகையால் பொதுமக்களின நலன் கருதி பழைய சுற்று சுவரை இடித்து விட்டு புதிய சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News