நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்
- நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.
- மதுபான கடை களை மூட வேண்டும் என்று தமிழக அரசிற்கு வரும் 2-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கியிருக்கிறோம்.
மதுரை
மதுரையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதா வது:-
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கடை களை மூடுவோம் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் மது பான கூடங்களை மூடு வதற்கு அரசு முன்வர வில்லை. மதுபான கடை களை மூட வேண்டும் என்று தமிழக அரசிற்கு வரும் 2-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கியிருக்கி றோம்.
இல்லையென்றால் மக்களின் ஆதரவுடன் பெரும் போராட்டம் வெடிக்கும். சில மாதங்க ளுக்கு முன்பு 200 கடை களை மூடிவிட்டு தற்போது எந்த வித முன்னறி விப்புமின்றி பல டாஸ்மாக் கடைகளை திறந்து வரு கின்றனர்.
சனாதனம் விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு புரிதல் இல்லை. தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வியை திசை திருப்பும் வகையில் சனாதனத்தை பற்றி பேசி வருகின்றனர். இதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வாழை யூர் குணா, மாவட்ட செய லாளர் சிறுதூர் பாலா, மாநகர் மாவட்ட செயலா ளர் தாமோதரன் உடனிருந்தனர்.