உள்ளூர் செய்திகள்
உசிலம்பட்டியில் தரைப்பாலம் உடைந்தது
- உசிலம்பட்டியில் பெய்த கனமழையால் தரைப்பாலம் உடைந்தது.
- இதனால் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
உசிலம்பட்டி
உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேக்கிழார்பட்டி தெற்கு ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சில்லாம்பட்டி ரோட்டில் உள்ள தரைப்பாலத்தில் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. மேக்கிழார்பட்டி-பசும்பொன் நகர் பகுதியில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஊராட்சி பணியாளர்கள் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முதலைக்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாசில்தார் கருப்பையா தலைமையில் அடைப்புகளை சீர்படுத்தும் பணி நடந்து வருகிறது.