உள்ளூர் செய்திகள்

மதன்குமார்

மீன்பிடிக்க சென்ற வாலிபர் சாவு

Published On 2022-07-09 08:33 GMT   |   Update On 2022-07-09 08:33 GMT
  • திருமங்கலம் அருகே மீன்பிடிக்க சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
  • கீழஉரப்பனூர் கண்மாயில் மீன்பிடிப்பதற்காக சென்றார்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் இந்திரா காலனியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் மதன்குமார்(39). இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மதன்குமார் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தார்.

இன்று விடுமுறை என்பதால் கீழஉரப்பனூர் கண்மாயில் மீன்பிடிப்பதற்காக அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுடன் சென்றார். திடீரென மதன்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தண்ணீரில் விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு கண்மாய் கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது மயக்க நிலையில் இருந்தார். பின்னர்திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News