உள்ளூர் செய்திகள்

மேலூர் அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்

Published On 2022-12-14 07:53 GMT   |   Update On 2022-12-14 07:53 GMT
  • மேலூர் டைமண்ட் ஜூப்ளி கிளப் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
  • 10 மற்றும் 12-ம்வகுப்பில் அரசு தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

மேலூர்

மேலூர் டைமண்ட் ஜூப்ளி கிளப் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மூலம் மாணவிகள் அமருவதற்கு மேஜைகள் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று கிளப் நிர்வாகத்தினர் ரூ. 1 லட்சம் மதிப்புடைய 30 மேஜைகளை வழங்கினர். வரும் கல்வி ஆண்டில் மேலூர் தாலுகா அளவில் 10 மற்றும் 12-ம்வகுப்பில் அரசு தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு கிளப் சார்பில் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இதில் தலைவர் மணிவாசகம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் வெங்கடேச பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மகாராஜா, இப்ராகீம், ரவி, ராஜேந்திரன், உறுப்பினர்கள் சந்திரமோகன், அப்துல் ரசாக், விஜயராகவன், தலைமை ஆசிரியர் செந்தில் நாயகி, உதவி தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News