உள்ளூர் செய்திகள்

கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள்

Published On 2023-02-13 08:36 GMT   |   Update On 2023-02-13 08:36 GMT
  • கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள் அசத்தினர்.
  • உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தியது.

திருமங்கலம்

உலக சோடகான் கராத்தே அமைப்பும், திருமங்கலம் லீ சாம்பியன் ஆர்ட்சும் இணைந்து உலக சாதனை நிகழ்ச்சியாக கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகளை நடத்தியது. திருமங்கலம் தனியார் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சி உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 5 மணிநேரம் கராத்தேயில் கிக்ஸ் (உதைத்தல்) நிகழ்ச்சியும், 2 கண்களை துணியால் கட்டியவாறு சிலம்பத்தில் இரட்டை கம்பு சுழற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

ஆணழகன் சங்கத்தின் செயலாளர் மற்றும் சோழன் உலக சாதனை புத்தகத்தின் தென்மாநிலத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நிறுவனர் நிமலன் நீலமேகம் முன்னிலை வகித்தார். கராத்தே அமைப்பின் செயலாளர் பால்பாண்டி வரவேற்றார். கராத்தே கிக்சில் 101 மாணவர்களும், சிலம்பம் சுற்றுவதில் 166 மாணவர்களும் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிவராமன், இந்தியன் சிலம்ப பள்ளி தலைமை பயிற்சியாளர் மணி, மதுரை மாவட்ட சிலம்ப கழகத்தின் பொருளாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News