உள்ளூர் செய்திகள்

பதவி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும்- அரசு டாக்டர்கள்

Published On 2023-05-12 08:58 GMT   |   Update On 2023-05-12 08:58 GMT
  • பதவி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அரசு டாக்டர்கள் கூறினர்.
  • கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும்.

மதுரை

மதுரையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் செந்தில், இளமாறன், குமரதேவன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தனர். அவர்கள் கூறிய தாவது:-

தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி அரசு மருத்துவர்க ளுக்கான பதவி உயர்வு தொடர்பான அர சாணை 293-ஐ அமல் படுத்துவோம் என்று தெரிவித்தது. ஆனால் இன்று வரை இந்த கோரிக் கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்ப்பு தெரி விப்பவர்கள் நீதிமன்றம் வரை சென்று இந்த அரசா ணைக்கு தடை விதிக்க உத்தரவு பெற இருப்பதா கவும் கூறினர்.

இந்த அரசாணையை பலமுறை நிறைவேற்ற எங்களது சங்க நிர்வாகி களிடம் அமைச்சர் பேசியும் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே முதல்- அமைச்சர் இதில் தலையிட்டு 16 ஆயிரம் மருத்துவர்கள் பயன்பெறக்கூடிய இந்த ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக ளில் காலியாக உள்ள 450 பேராசிரியர் பணியிடங்க ளையும், 550 இணை பேரா சிரியர்கள் பணியிடங்க ளையும் உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையென் றால் வரும் காலங்களில் அரசு கல்லூரிகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மேலும் வருகிற 14-ந் தேதி நடைபெறும் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் மே 29-ந்தேதி முதல் நடத்தவுள்ள போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும். இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்கள் அமைச்சரின் வாக்குறுதியை கேட்டு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த நிலையில் கால தாமதப்படுத்தாமல் உடனடி யாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும் அளவில் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News