உள்ளூர் செய்திகள்

மாநில மகளிர் குத்துச்சண்டை போட்டி

Published On 2022-12-04 08:09 GMT   |   Update On 2022-12-04 08:09 GMT
  • மாநில மகளிர் குத்துச்சண்டை போட்டி நடக்கிறது.
  • மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழக பொது செயலாளர் டி.என்.செழியன் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை குத்துச்சண்டை கழகம் சார்பில் எலைட் பிரிவு பெண்கள் தேர்வு போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 7-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்க உள்ளது.

இதில் மாவட்ட குத்துச்சண்டை கழகத்தில் பதிவு பெற்ற சங்கங்கள் மற்றும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில போட்டியில் கலந்து கொள்ள இயலும்.

மாநில போட்டியில் வெற்றி பெற்றால், மத்தியபிரதேச மாநிலத்தில் இந்த மாதம் நடக்க உள்ள தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க இயலும். எனவே

1982-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும் எலைட் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழக பொது செயலாளர் டி.என்.செழியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News