உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான கபடி போட்டி

Published On 2022-10-19 08:59 GMT   |   Update On 2022-10-19 08:59 GMT
  • மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
  • சிறப்பாக ஆடிய கபடி வீரருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் முதன்முறையாக கிராமம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. மதுரை,விருதுநகர், ராமநாதபுரம்,கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 75 அணிகள் பங்கேற்றன. அரை இறுதி போட்டியில் ஆலம்பட்டி ஏ அணியினர் மற்றும் ஆலம்பட்டி பி அணியினர் மோதியதில் ஏ அணியினர் 9-7 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றனர். மற்றொரு போட்டியில் துலுக்கப்பட்டி பராசக்தி அணியினரும், ஆலம்பட்டி பொன்னுசாமி அணியினரும் மோதியதில் துலுக்கப்பட்டி அணி 14-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் ஆலம்பட்டி ஏ அணியினர், துலுக்கப்பட்டி பராசக்தி அணி மோதியதில் ஆலம்பட்டி ஏ அணியினர் 3-0 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ஏ அணியினருக்கு அ.தி.மு.க. திருமங்கலம் யூனியன் தலைவர் லதா ஜெகன் ஆளுயர சுழற் கோப்பை வழங்கினார். 2-வது, 3-வது இடம் பெற்ற அணிக்கும் கோப்பை வழங்கப்பட்டது. சிறப்பாக ஆடிய கபடி வீரருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News