உள்ளூர் செய்திகள்

மதுரையில் இருந்து சீரடிக்கு ஆன்மீக சுற்றுலா ரெயில்

Published On 2022-08-01 09:19 GMT   |   Update On 2022-08-01 09:19 GMT
  • மதுரையில் இருந்து சீரடிக்கு ஆன்மீக சுற்றுலா ரெயில் 21-ந் தேதி புறப்படுகிறது.
  • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

மதுரை

மதுரையில் இருந்து முதன் முதலாக பல்வேறு ஆன்மீக சுற்றுலா தலங்களை இணைத்து மதுரை-காசிக்கு ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-வது ஆன்மீக சுற்றுலா ரெயில் மதுரையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் வருகிற 21-ந்தேதி காலை 7.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுகிறது. இது திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை, எழும்பூர் வழியாக ஐதராபாத் செல்கிறது. அங்கு சலர்ஜங் மியூசியம், சார்மினார், ராமானுஜர் சமத்துவ சிலை, கோல்கொண்டா கோட்டை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க உள்ளனர்.

பின்னர் வருகிற 24-ந்தேதி சீரடி சென்று சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்கின்றனர். மறுநாள் சனிசிங்னாபூர் சென்று, நாசிக்ந கரில் திரியம்பகேஷ்வர், பஞ்சவடி தரிசனம் செய்கின்றனர். வருகிற 27-ந் தேதி பண்டரிபுரம் பாண்டுரங்கர் கோவிலில் சாமி தரிசனம், 28-ந் தேதி மந்திராலயம் ராகவேந்திரர் தரிசனம், 29-ந் தேதி சுற்றுலா முடிவடைகிறது.

ஆன்மீக ரெயில் சுற்றுலாவில் தங்குமிடம், உணவு, உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் தங்கள் வசதிக்ற்பகே ரூ.30 ஆயிரம், ரூ. 24 ஆயிரம், ரூ. 16 ஆயிரத்து 900 ஆகிய 3 வகைகளில் கட்டணங்களில் பயணம் செய்யலாம்.

2-க்கும் மேற்பட்டோர் குடும்பமாக செல்லும் போது கட்டணம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த சுற்றுலாவுக்கு www.ularail.com இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம், அல்லது 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News