உள்ளூர் செய்திகள்

அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை

Published On 2023-06-20 08:37 GMT   |   Update On 2023-06-20 08:37 GMT
  • மதுரையில் அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.
  • எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதுரை 

மதுரை அஞ்சல் கோட்ட நடுநிலை கண்காணிப்பாளர் ஜவகர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் கிராம் 1-க்கு ரூ.5,926-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை தொடங்கியுள்ளது. தனி நபர் நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கத்திற்கு முதலீடு செய்யலாம். இந்த தங்கமானது பத்திர வடிவில் இருந்தால் அது பாதுகாப்பான முதலீடு மட்டுமின்றி ஆண்டு ஒன்றுக்கு 2.5 சதவீதம் வட்டியும் கூடுதலாக கிடைக்கும். எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News