சாலையோரங்கள் சேறும் சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் அவதி
- சாலையோரங்கள் சேறும் சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
- பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. 3 நாட்களாக மாலை நேரத்தில் பெய்து வரும் இந்த மழையால் மதுரை நகரின் பல பகுதிகளில் சாலை யோரம் மழை நீர் தேங்கி உள்ளது. பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையோரமும் மழை நீர் தேங்கி சேறு சகதியுமாக மாறிப்போய் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காளவாசல்
இதேபோல காளவாசல் சிக்னல்-தேனி பிரதான சாலையில் சிறிய மழைக்கே தண்ணீர் குளம்போல் தேங்கி சகதியாக கிடப்பதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் கடைவீதிகளில் உள்ள சாலைகளிலும் பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் ஓட்டல்க ளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மதுரை நகரின் பல்வேறு இடங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. ஆனால் மாநகராட்சி எந்த வித நடவடிக்கையும் எடுக் காமல் இருந்து வருகிறது.
சித்திரை திருவிழா நடந்து வரும் நிலையில் இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். மெத்தனம் காட்டினால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
போக்குவரத்து நெருக்கடி
மேலும் நகரின் குறுகிய சாலைகளில் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை அனுமதிப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை யும் போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர்.
மதுரை மாநகரில் மழை பெய்தால் தண்ணீர் வடிய முடியாத சூழ்நிலை பல இடங்க ளில் காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.