உள்ளூர் செய்திகள்

மக்கள்தொடர்பு முகாம்

Published On 2022-07-29 08:32 GMT   |   Update On 2022-07-29 08:32 GMT
  • கோபாலபுரத்தில் மக்கள்தொடர்பு முகாம் நடந்தது.
  • 361 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படை அடுத்துள்ள எஸ்.கோபாலபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலு தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை 361 பயனாளிகளுக்கு வழங்கினார்.

கள்ளிக்குடி வருவாய்த்துறை உள்ளிட்ட 14 அரசுதுறைகளின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் 361 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 66 லட்சத்து 44 ஆயிரத்து 975 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலர் சௌந்தரியா, கள்ளிக்குடி தாசில்தார் சுரேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நீலாதேவி, வருவாய் ஆய்வாளர் குமார், வி.ஏ.ஓ. முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News