உள்ளூர் செய்திகள்

கோழி வியாபாரி மாயம்

Published On 2023-06-02 07:18 GMT   |   Update On 2023-06-02 07:18 GMT
  • கோழி வியாபாரி மாயமானார்.
  • அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

திருமங்கலம்

திருமங்கலம் சண்முகா நகரை சேர்ந்த கோழி வியாபாரி சந்திரகுமார் (வயது55). இவருடைய மனைவி நாகரஞ்சனி. இவர்களது ஒரே மகன் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சந்திரகுமார் கரிசல்பட்டியில் உள்ள தனது உறவினர் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். மனைவி நாகரஞ்சனி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் வீட்டில் இல்லை. அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

அதில் வேலை விசயமாக வெளியூருக்கு போகிறேன் என்று எழுதியிருந்தார். இதையடுத்து தனது கணவரை நாகரஞ்சனி பல இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்காததால், தனது கணவர் மாயமானது குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News