உள்ளூர் செய்திகள்

ஊராட்சி செயலக கட்டுமான பணி தொடக்கம்

Published On 2023-06-15 08:03 GMT   |   Update On 2023-06-15 08:03 GMT
  • சோழவந்தான் அருகே காடுபட்டியில் ஊராட்சி செயலக கட்டுமான பணி தொடக்கப்பட்டது.
  • தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டிடங்களை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊராட்சி வளாக கட்டுமான பணிகள் தொடங்கியது.

இதில் பி.டி.ஓ. கதிரவன், உதவிப் பொறியாளர் பூம்பாண்டி, வி.ஏ.ஓ., மணிவேல், ஊரா.சி தலைவர் ஆனந்தன்.செயலர் ஓய்யணன். பணியாளர் சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் போலீசார் காடுபட்டியில் பயன்பாடின்றி இருந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டிடங்களை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

Tags:    

Similar News