உள்ளூர் செய்திகள்

லாரி மோதி பெயிண்டர் பலி

Published On 2022-11-04 07:48 GMT   |   Update On 2022-11-04 07:48 GMT
  • திருமங்கலம் அருகே லாரி மோதி பெயிண்டர் பலியானார்.
  • இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள திருவாழவாயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் முனுசாமி (வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவி சுந்தரலட்சுமி, 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் முனுசாமி மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் விமான நிலைய பகுதியில் பெயிண்டிங் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

காயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News