உள்ளூர் செய்திகள்

உத்தரவு

பழமையான 571 கட்டிடங்களை இடிக்க மேயர் உத்தரவு

Published On 2022-06-08 11:00 GMT   |   Update On 2022-06-08 11:00 GMT
  • மதுரை மாநகர பகுதியில் பழமையான 571 கட்டிடங்களை இடிக்க மேயர் உத்தரவிட்டுள்ளார்.
  • உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மதுரை

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பல நூற்றாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த இடியும் தருவாயில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இந்த கட்டிடங்கள் சேதமடைந்து, பழமையானதாக உள்ளதால் மழைக்காலங்களில் கட்டிடங்களின் உறுதித்தன்மை இழப்பதால் அருகில் இருக்கும் கடைகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதனை தவிர்க்கும் வகையில் மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த வீடுகள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்டவைகணக்கெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டலம் 1-க்கு உட்பட்ட 99 கட்டிடங்களுக்கும், மண்டலம் 2-க்கு உட்பட்ட 148 கட்டிடங்களுக்கும், மண்டலம் 3-க்கு உட்பட்ட 104 கட்டிடங்களுக்கும், மண்டலம் 4-க்கு உட்பட்ட 220 கட்டிடங்களுக்கும் என மொத்தம் 571 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு பழமை வாய்ந்த கட்டிடத்தை அப்புறப்படுத்த தவறும்பட்சத்தில் அந்த கட்டிடத்தை மாநகராட்சியால் அப்புறப்படுத்தி அதற்குரிய கட்டணத்தை அபராதத்துடன் உரிமையாளர்களிடம் வசூல் செய்யப்படும்.

எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மாநகராட்சியின் சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News