உள்ளூர் செய்திகள்

சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2023-08-09 09:44 GMT   |   Update On 2023-08-09 09:44 GMT
  • மதுரை வழியாக தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
  • முக்கிய ரெயில் நிலையங்க–ளில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

விடுமுறை கூட்ட நெரி–சலை சமாளிக்க தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவ–தாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

வருகின்ற 11-ந்தேதி துவங்கி 15-ந்தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில்களில் கூட்ட நெரி–சல் ஏற்படும். இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரெயில்வேயின் சார்பில் தாம்பரம்-திருநெல்வேலி தாம்பரம் சிறப்பு விரைவு ரெயில் இயக்க இருப்பதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வருகின்ற 11-ந்தேதி (06051) தாம்பரத்திலிருந்து சிறப்பு விரைவு ரெயில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணியளவில் திருநெல் ேவலியை சென்றடையும். அதேபோல (06052) திருநெல்வேலியில் இருந்து 12-ந்தேதி மாலை 5.50 மணி அளவில் புறப்படும் ரெயில் மறுநாள் காலை 4.10 மணி–யளவில் தாம்பரம் சென்றடையும்.

இதில் இரண்டு முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 9 படுக்கை வசதி உடைய பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்ப்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண் டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News