உள்ளூர் செய்திகள்
புதிய தி.மு.க. நிர்வாகிக்கு வாழ்த்து
- புதிய தி.மு.க. நிர்வாகிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- செயலாளராக குருவித்துறை பசும்பொன்மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சோழவந்தான்
தமிழகம் முழுவதும் புதிதாக தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக குருவித்துறை பசும்பொன்மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு சோழவந்தான் பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின், பேரூர் இணைச் செயலாளர் செல்வராணி ஜெயராமச்சந்திரன், முத்து செல்வி சதீஷ், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், செந்தில், ஊத்துக்குளி செந்தில், கவுன்சிலர்கள் உள்பட பலர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.