உள்ளூர் செய்திகள்

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். 

தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் ஆய்வு

Published On 2022-10-26 09:44 GMT   |   Update On 2022-10-26 09:44 GMT
  • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
  • மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.

மதுரை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொது மக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து திரும்பி செல்லும் பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சிறப்பு பஸ்கள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

அங்குள்ள மதுரை கோட்ட முன்பதிவு விசா ரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்கு வரத்து கழக முன்பதிவு விசாரணை மையங்களிலும் அமைச்சர் ஆய்வு செய்தார்.குறிப்பாக, முன்பதிவு செய்துள்ள பயணிகளிடம் பஸ் வசதிகள்குறித்துஆய்வு செய்தார். பயணிகளிடம் பஸ் வசதிகள் குறித்து கருத்து களையும் கேட்டறிந்தார்.

அமைச்சரின் இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News