புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
- மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வும். அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கினார்.
இதில் மத்திய தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி 22-வது வார்டு பகுதியில் உள்ள திரு.வி.க. நகரில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
பின்னர் 58-வது வார்டு ஆரப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூடத்தை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசிய பொருட்க ளை பெறுகின்ற வகையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதா ரர்களுக்கு அத்தியாவசிய பொருட்க ளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், மதுரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் குரு மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.