உள்ளூர் செய்திகள்

தங்கப்பதக்கம் வென்ற மேலூர் மாணவி

Published On 2022-11-10 13:27 IST   |   Update On 2022-11-10 13:27:00 IST
  • சர்வதேசப் போட்டியில் மேலூர் மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
  • சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் கால் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி, விவசாயி. இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் வர்ஷினி டெல்லியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற அவர் தனது சொந்த கிராமத்திற்கு இன்று வந்தார். அவரை வெள்ளரிப்பட்டி டோல்கேட்டில் கிராம மக்கள் வரவேற்றனர்.

அப்போது பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, அவருக்கு மாலை அணிவித்தனர். வர்ஷினி அரசு பள்ளியில் படித்த மாணவி ஆவார். அவர் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். தற்போது அவர் மதுரை மீனாட்சி கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் கால் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும், பயிற்சியளித்த ரஞ்சித் மற்றும் பிரேம் ஆகியோருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News