உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி வாகனம் மோதி பலி

Published On 2022-09-04 08:15 GMT   |   Update On 2022-09-04 08:15 GMT
  • டி.கல்லுப்பட்டி அருகே கூலி தொழிலாளி வாகனம் மோதி பலியானார்.
  • ராஜபாளையம்-மதுரை சாலையை கடக்க முயன்றார்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஜாரி உசிலம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது52), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கருப்பசாமி டீ குடிப்பதற்காக அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு செல்வதற்காக ராஜபாளையம்-மதுரை சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சென்னை தாம்பரம் கணபதிபுரத்தைச் சேர்ந்த ராம்சுந்தர் மகன் பரத் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நடந் து சென்ற கருப்பசாமி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பேரையூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கருப்பசாமி இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

இந்த விபத்து குறித்து கருப்பசாமி மனைவி சண்முகத்தாய் கொடுத்த புகாரின்பேரில் பரத் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News