உள்ளூர் செய்திகள்

சக்திவிநாயகர், பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா

Published On 2023-11-25 08:47 GMT   |   Update On 2023-11-25 08:47 GMT
  • சோழவந்தான் அருகே சக்திவிநாயகர், பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
  • பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின்னர் கும்பாபிஷேகம் நடக்க வில்லை. இந்த நிலையில் இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து திருப்பணிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. மதுரை வீரராகவ பெருமாள் கோவில் பட்டர்கள் ரவி, வீர ராகவன் ஆகியோர் தலைமையில் சிவாச்சா ரியார்கள் யாக பூஜை நடத்தினர். தொடர்ந்து நான்காம் கால ஹோமம் நடந்து மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். பின்னர் கோவில் கோபுரத்தின் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சக்தி விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கொடிமங்கலம் கிரா மத்தில் பெரியபுன மங்கை என்ற பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாளில் திருவிளக்குபூஜை, மூத்த பிள்ளையார் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடும், 2-ம் நாள் கோ பூஜை, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல், களை ஈர்ப்பு வழிபாடும், 3-ம் நாள் இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. 4-ம் நாளில் நான்காம் கால யாகபூஜை நடந்து நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் மேளதா ளத்துடன் திருக்குடங்கள் எடுத்துக் கோவிலை வலம் வந்தனர். பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், பரிவார தெய்வங்க ளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நாகமலை புதுக்கோட்டை போலீசார் 

Tags:    

Similar News